வங்கிகள் சார்பில் நாளை கல்வி கடன் முகாம் மாணவர்கள் பங்கேற்று பயன்பெற அழைப்பு
வங்கிகள் சார்பில் நாளை கல்வி கடன் முகாம்மாணவர்கள் பங்கேற்று பயன்பெற அழைப்புநாமக்கல், செப். 25-'அனைத்து வங்கிகள் சார்பில், நாளை கல்வி கடன் முகாம், சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், கல்வி கடன் முகாம் அனைத்து வங்கிகள் சார்பில், நாளை காலை, 9:00 மணிக்கு, எர்ணாபுரம் சி.எம்.எஸ்., பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இதில், ஏற்கனவே நாமக்கல் கல்லுாரி மற்றும் மற்ற கல்வி நிறுவனங்களில் பெறப்பட்ட கல்விக்கடன் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் ஆணை வழங்கப்படுகிறது. மேலும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லுாரிகளில் பயிலும் மாணவர்கள், புதிதாக கல்விக்கடன் பெற விண்ணப்பங்கள் இணையத்தில் பதிவேற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.கல்வி கடனுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், ஆதார், பான் கார்டு மற்றும் கல்வி தொடர்பான ஆவணங்களுடன் கலந்துகொண்டு தங்கள் விண்ணப்பங்களை www.vidyalakshmi.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பான் கார்டு இல்லாத மாணவர்கள், ஆதார் நகல் மற்றும் 2 புகைப்படங்கள் எடுத்து வந்தால் முகாம் நடக்கும் இடத்திலேயே இ--சேவை மையம் மூலம், பான் கார்டுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். புதிய சேமிப்பு கணக்கு தொடங்கும் வசதி, கடன் தொடர்பான வங்கி உதவி மைய சேவை வசதிகளும் இந்த முகாமில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இம்முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு, பரிசீலனை செய்து உடனடியாக கல்வி கடன் அனுமதி வழங்கப்படும். விபரங்களுக்கு, 9486349282 என்ற மொபைல் எண்ணிலோ அல்லது சேந்தமங்கலம் சாலையில் உள்ள மாவட்ட முன்னோடி வங்கியில் நேரடியாகவோ அணுகி பயன் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.