உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண்சரிவை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்

மண்சரிவை சரி செய்ய மக்கள் வலியுறுத்தல்

மல்லசமுத்திரம்: மாரம்பாளையம்-ராமாபுரம் சாலையில் ஏற்பட்டுள்ள, மண் சரிவை சரி செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மல்லசமுத்திரம் அருகே, மாரம்பாளையத்தில் இருந்து ராமாபுரம் வரை அதிகளவில் இருசக்கர, கனரக, இலகுரக வாகனங்கள் சென்று வருகிறது. இச்சாலையில், 5 கி.மீ., தொலைவிற்கு சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், வாகனஓட்டிகள் சாலையை விட்டு சற்றுதள்ளி சென்றால், மண்சரிவில் சிக்கி, கீழே விழுகின்றனர். எனவே, மண் சரிவை சரி செய்ய, நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி