உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்

மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை: கலெக்டர்

நாமக்கல்: நாமக்கல் கலெக்டராக பணியாற்றி வந்த உமா, சென்னை சிறப்பு செயலாக்க திட்ட கூடுதல் செயலாளராக பணி மாறுதல் பெற்றார். இதையடுத்து, சேலம் தமிழக மேக்னசைட் நிறுவ-னத்தின் மேலாண் இயக்குனராக பணியாற்றி வந்த துர்காமூர்த்தி, நாமக்கல் கலெக்டராக நியமிக்கப்பட்டார். அவர், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், 17வது கலெக்டராகவும், 5வது பெண் கலெக்டராகவும், அவருடைய அரசு பணியில் முதன்-முறையாக மாவட்ட கலெக்டரகாவும் பொறுப்பேற்றார். அவருக்கு அனைத்து துறை அரசு அதிகாரிகள் மற்றும் பணியா-ளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.அவர் கூறுகையில், ''நாமக்கல் மாவட்டத்தில், ஏற்கனவே நான் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றியுள்ளேன். எனக்கு, மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை நிர்வாகம் ஏற்கனவே தெரியும். தற்போது, தமிழக அரசால் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளேன். மாவட்-டத்தில் நடந்து வரும் அரசு திட்டப்பணிகளை முழுமையாக ஆய்வு செய்து, மக்கள் நலத்திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவேன். திட்டங்களை செயல்படுத்த, அனைத்து துறை அரசு அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி