உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / ரூ. 11.30 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ரூ. 11.30 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

ப.வேலுார்: -நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில், வாரந்தோறும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடக்கிறது. இதில் சுற்று வட்டார விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொள்வர். நேற்று நடந்த ஏலத்தில், 11.30 லட்சம் ரூபாய்க்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது.கடத்த வாரம் நடந்த வேளாண்மை சந்தையில் ஏலத்திற்கு, 12 ஆயிரத்துக்கு, 869 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ, 100.19, குறைந்தபட்சமாக, 96.97, சராசரியாக, 99.89 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 12 லட்சத்து, 68 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.நேற்று நடந்த ஏலத்திற்கு, 11 ஆயிரத்துக்கு, 860 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். அதிகபட்சமாக கிலோ, 97.89, குறைந்தபட்சமாக, 92.97, சராசரியாக, 95.65 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம், 11 லட்சத்து, 30 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி