நாமக்கல்: எருமப்பட்டி ஒன்றியம், பழையபாளையம் பஞ்-சாயத்தில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாம் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி முகாமை தொடங்கி வைத்து கூறியதாவது:நாமக்கல் மாவட்டத்தில், கால்நடைகளுக்கு, 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிபணி இன்று (நேற்று) தொடங்கி, 21 நாட்கள் நடக்கிறது. மாவட்டத்தில் மொத்தமுள்ள, இரண்டு லட்சத்து, 80,600 கால்நடைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்ப-டுகிறது. பொதுமக்கள் அனைவரும், அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர்களால் குறிப்-பிடப்படும் தேதியில், குறிப்பிட்ட இடங்களுக்கு, தங்கள் கால்நடைகளை கொண்டு சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.இப்பணிக்காக, மாவட்டம் முழுவதும், கால்-நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வா-ளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியா-ளர்கள் கொண்டு, 105 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள், அனைத்து குக்-கிராமங்களுக்கும் நேரில் சென்று, அந்தந்த கிரா-மங்களிலேயே கோமாரி நோய் தடுப்பூசி பணிகள் மேற்கொள்வர். விவசாயிகள், தங்களது 4 மாதத்-திற்கு மேற்பட்ட கன்றுகள், பசு, எருது, எருமை ஆகிய கால்நடை-களை முகாமிற்கு அழைத்துச் சென்று, தவறாமல் தடுப்பூசி போட்டு பயன்பெறலாம்.இவ்வாறு அவர் கூறினார்.