உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

மாவட்டத்தில் நாளை முதல் 4 நாள் மிதமான மழைக்கு வாய்ப்பு

நாமக்கல்:'நாமக்கல் மாவட்டத்தில், நாளை முதல், 23 வரை, நான்கு நாட்கள் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது' என, கால்நடை மருத்துவக்கல்லுாரி மற்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு:நாமக்கல் மாவட்டத்தில், கடந்த, இரண்டு நாட்களாக சில இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. இதனால் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை குறைந்துள்ளது. நாளை முதல், 23 வரை, நான்கு நாட்கள், அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 31 முதல், 34 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 22 டிகிரி முதல், 25 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். காற்றின் ஈரப்பதம், 60 முதல், 90 சதவீதம் வரை இருக்கும். காற்றின் வேகம் மேற்கு, தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு, 14 முதல், 18 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும். நாளை, 6 மி.மீ., 21ல் 14 மி.மீ., 22ல் 7 மி.மீ., 23ல், 7 மி.மீ., வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.கடந்த வாரம், சில பண்ணைகளில் வெள்ளைக்கழிச்சல் நோய் தாக்கத்தால் கோழிகள் இறந்துள்ளது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் பண்ணைகளில் உயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை