உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / சாய் தபோவனத்தில் வியாழன் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

சாய் தபோவனத்தில் வியாழன் சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி

நாமக்கல் : நாமக்கல்-பரமத்தி சாலை, வள்ளிபுரம் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், சித்திரை மாதம் மூன்றாவது, வியாழனை முன்னிட்டு சிறப்பு ஆரத்தி வழிபாடு நடந்தது.அதை முன்னிட்டு நேற்று அதிகாலை, உற்சவர் சாய்பாபாவிற்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபி ேஷகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடைபெற்றது. பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் கொண்டு வரப்பட்ட மலர்களால், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதியான் ஆரத்தி என்னும் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க பாபாவிற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை