உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாடுகள் வரத்து குறைவால் ரூ.2.30 கோடிக்கு வர்த்தகம்

மாடுகள் வரத்து குறைவால் ரூ.2.30 கோடிக்கு வர்த்தகம்

சேந்தமங்கலம், “புதுச்சத்திரம் யூனியன், புதன் சந்தை பகுதியில் செவ்வாய்க்கிழமை தோறும் மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம், திங்கட்கிழமை இரவு தொடங்கி, செவ்வாய்க்கிழமை மதியம் வரை நடைபெறும்.தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை வாங்க, விற்க, விவசாயிகள், வியாபாரிகள் புதன் சந்தை பகுதியில் கூடுவர். கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெறும்.ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள் மற்றும் இறைச்சி மாடுகள் குறைந்த அளவே விற்பனைக்காக கொண்டு வந்தனர். கேரளா, ஆந்திரா, தமிழக உள் மாவட்டங்களில் மாடுகளை வாங்க வந்திருந்த வியாபாரிகள் எண்ணிக்கையும் குறைந்தே காணப்பட்டது. இறைச்சி மாடுகள், 30,000 ரூபாய்க்கும், கறவை மாடுகள், 47,000 ரூபாய், கன்றுகுட்டிகள், 21,000 ரூயாய் என, மொத்தம், 2.30 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை