உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

பொங்கல் அறுவடைக்கு மஞ்சள் தயார்

எருமப்பட்டி: பொங்கல் பண்டிகைக்கு, வெளி மாவட்டங்க-ளுக்கு விற்பனைக்கு கொண்டுசெல்ல பயிரிட்ட மஞ்சள், தற்போது நன்கு விளைந்து பச்சை பசே-லென காணப்படுகிறது.எருமப்பட்டி யூனியனில் பவித்திரம், நவலடிப்-பட்டி, கஸ்துாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் மஞ்சள் பயிரிட்டுள்-ளனர். இந்த மஞ்சள் செடிகள், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டி-கையை குறிவைத்தே விளைவிக்கப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மஞ்சள் செடிகள், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது, இந்த மஞ்சள் செடிகள், அறுவடைக்கு தயார் நிலையில் உள்-ளன. பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களே உள்-ளதால், மஞ்சள் கொத்துகளில் அதன் இலைகள் காயாமல், பச்சை பசேலென இருப்பதற்காக, தினமும் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதுகுறித்து, மஞ்சள் விவசாயி பன்னீர் கூறியதா-வது: பொங்கல் பண்டிகை அன்று மஞ்சள் செடிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படு-கிறது. இதனால், ஆண்டுதோறும் வெளி மாவட்-டங்களுக்கு அனுப்புவதற்காக மஞ்சள் பயிரிட்டு வருகிறேம். இந்தாண்டு பொங்கல் பண்டிகை வர உள்ளதால், அதன் நிறம் மாறாமல் இருக்க செடி-களுக்கு தண்ணீர் விட்டு பராமரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை