உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / குமாரபாளையம் அரசு கல்லுாரியில் இளங்கலை மாணவர் கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கல்லுாரியில் இளங்கலை மாணவர் கலந்தாய்வு

குமாரபாளையம்: 'குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லுாரியில், இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, இன்று முதல் நடக்கிறது' என, கல்லுாரி முதல்வர் ரேணுகா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், இளங்கலை, இளம் அறிவியல் பாடப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு, இன்று முதல் நடக்கிறது. இதுகுறித்த தகவல், கல்லாரி வலைத்தளம், மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ்., வாட்ஸாப் வழியாக, விண்ணப்பித்த மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள், மாற்று சான்றிதழ், 10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகிய அசல், நகல் சான்றிதழ்களுடன், காலை, 9:30 மணிக்கு கல்லுாரிக்கு வரவேண்டும். பி.ஏ., ஆங்கிலம், தமிழ், பி.காம்., பி.எஸ்சி., கணிதம், பி.எஸ்சி., கணினி அறிவியல், பி.எஸ்சி., இயற்பியல், பி.எஸ்சி., வேதியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ