மேலும் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்
17-Feb-2025
நாமக்கல்: கர்நாடகா மாநிலம் உடுப்பியில் பிரபலமான கிருஷ்ணர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அடுத்த மடாதிபதியாக ஷிரூர் மத்வமடாதீசர் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். இதையொட்டி மத்வமடாதீசர், நாமக்கல்லில் உள்ள ராகவேந்திரர் மடத்திற்கு வருகை புரிந்தார். மடத்தில் அவர் ஊஞ்சல் சேவை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். மடத்தில் சமஸ்தான பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம், ஆசீர்வாதம் வழங்கினார். தொடர்ந்து, நாமக்கல்லில் உள்ள நாமகிரி தாயார், நரசிம்ம சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். மத்வ மடாதீசருக்கு திருக்கோவில் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
17-Feb-2025