உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

மாரியம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

கூடலுார்:கூடலுாரில் உள்ள மாரியம்மன் கோவில்களில், ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.மேல் கூடலுார் சந்தக்கடை மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. மாரியம்மன் பழங்களால் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் நெய் விளக்கு ஏற்றி அம்மனை தரிசனம் செய்தனர். மாலை விளக்கு பூஜை நடந்தது.கூடலுார், 2-வது மைல், முத்துமாரியம்மன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, கஞ்சி கலயம் ஊர்வலம் துவங்கியது. ஊர்வலம், 2-வது மைல் சந்திப்பு வரை சென்று கோவிலில் நிறைவு பெற்றது. பெண் பக்தர்கள் கஞ்சி கலயம் எடுத்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.இதேபோன்று, மாவட்டத்தின் பங்வேறு பகுதிகளில் உள்ள மாரியம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தது.வீடுகளிலும் அம்மனுக்கு பொங்கல் வைத்து பூஜை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி