உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / மனநல காப்பகத்துக்கு சீல் சிகிச்சை பெற்ற 13 பேர் மீட்பு தலைமறைவான உரிமையாளருக்கு வலை

மனநல காப்பகத்துக்கு சீல் சிகிச்சை பெற்ற 13 பேர் மீட்பு தலைமறைவான உரிமையாளருக்கு வலை

பந்தலுார்:நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே பெக்கி என்ற இடத்தில் கடந்த, 1999 ஆம் ஆண்டு டிச., 27ஆம் தேதி, அகஸ்டின் என்பவர் 'லவ்ஷோர்' எனும் காப்பகத்தை துவங்கினார். இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் ஆலோசனையின் படி, காப்பகத்தில் தங்கி இருந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது. இது தொடர்பாக, 2019ம் ஆண்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விளக்கம் கேட்டனர். அதில், 'அலோபதி மருந்துகளுடன், காப்பக உரிமையாளர் அகஸ்டியன் சித்த வைத்தியமும் செய்து வந்துள்ளார்' என்பது தெரிந்தது. அப்போது, இந்த காப்பத்தில், 60- பேர் தங்கி இருந்தனர். கடந்த மாதம் மருத்துவக் குழுவினர் ஆய்வுக்கு சென்றபோது, 23 பேர் தங்கி இருந்தனர்.காப்பகம் முறைகேடாக செயல்பட்டு வருகிறது' என, மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது. தொடர்ந்து, கூடலுார் ஆர்.டி.ஓ., செல்வகுமார், மாவட்ட சமூக நல அலுவலர் பிரவீனா தேவி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு நேற்று காலை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதில், 'இந்த மனநல காப்பகம் எந்தவிதமான அனுமதியும் பெறாமல், முறைகேடாக செயல்பட்டு வந்ததும், காப்பகத்தில் தங்கி இருந்தவர்கள் எந்த விதமான வசதிகளும் இன்றி சிரமப்பட்டு வந்தனர்' என்பதும் தெரிந்தது. இதைத் தொடர்ந்து, தங்க வைக்கப்பட்டிருந்த, 9- ஆண்கள், 4- பெண்கள் என மொத்தம் 13 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, கோவையில் உள்ள இரண்டு மனநல காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பணியாற்றி வந்த சிறுவன் மற்றும் பெண், ஊட்டியில் உள்ள காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.கட்டடம் 'சீல்' வைக்கப்பட்டு தலைமறைவான காப்பகத்தின் உரிமையாளர் அகஸ்டின் மீது, நெலக்கோட்டை போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை