உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை

தமிழகத்தில் ஊடுருவிய நக்சல்கள் தேடும் பணியில் அதிரடிப்படை

பந்தலூர்:தமிழக - கேரள எல்லை பகுதியான வயநாடு, மலப்புரம், பாலக்காடு பகுதிகளில், சில ஆண்டுகளாக நக்சல்கள் நடமாட்டம் தலை துாக்கியுள்ளது. வனத்தில் முகாமிட்டு பழங்குடியின கிராமங்களுக்கு சென்று, அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபடுவது, போராட்டத்திற்கு ஆதரவு கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் அரசு அலுவலகங்கள் மற்றும் சோதனைசாவடிகள் மீது தாக்குதல் நடத்தும் செயலிலும் ஈடுபட்டு வந்து உள்ளனர். நக்சல் நடமாட்டத்தை தடுக்க எல்லை யோரப் பகுதிகளில் அதிரடிப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, கேரளாவில் தண்டர்போல்ட் அதிரடிப்படை, கர்நாடகாவில் சிறப்பு அதிரடிப் படை போலீசார் என, வனத்தில் ஆங்காங்கே கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளான மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் தேர்தல் சமயத்தில், வயநாடு அருகே கம்பமலை எஸ்டேட் பகுதியில் பகல் நேரத்தில், தொழிலாளர்கள் மத்தியில் வந்து தேர்தலுக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு சென்றனர். இந்நிலையில், நக்சல் மனோஜ் கடந்த வாரம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வனத்திலிருந்து நக்சல்கள் மொய்தீன், சோமன், சந்தோஷ் ஆகியோர் எர்ணாகுளம் பகுதியிலிருந்து ரயில் வாயிலாக கோவை, ஈரோடு பகுதிக்கு சென்றிருக்கலாம் அல்லது வயநாடு பகுதியில் நக்சல் ஆதரவாளர்களுடன் தங்கி இருக்கலாம் என்றார். இதையடுத்து, மாநில அதிரடிப்படை போலீசார் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை