உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / வழிகாட்டி பலகை அமைக்கும் பணி போக்குவரத்து போலீசார் தீவிரம்

வழிகாட்டி பலகை அமைக்கும் பணி போக்குவரத்து போலீசார் தீவிரம்

ஊட்டி:ஊட்டியில் கூடுதலாக வழிகாட்டி பலகைகள் அமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரிக்கு கோடை சீசனான ஏப்., மே மாதங்களில், 10 லட்சம் பேர்; ஆண்டு முழுவதும், 30 லட்சம் பேரும் வந்து செல்கின்றனர். அதில், 70 சதவீதசுற்றுலா பயணிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்தாமல், சொந்த வாகனங்களில் வருகின்றனர். இதனால், சில சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட துாரத்துக்கு வாகனங்கள் அடிக்கடி அணிவகுத்து நிற்கின்றன. உள்ளூர் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு செல்ல முடியவில்லை. சுற்றுலா பயணிகளும் சுற்றுலாத்தலங்களுக்கு சரியான நேரத்திற்கு செல்ல முடியவில்லை. ஆம்புலன்ஸ் வாகனங்களும் இந்த கூட்டத்தில் சிக்கி கொள்கிறது. இதற்கிடையே வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சாலை ஓரம் நின்று வழி கேட்கின்றனர். ஒரு சிலர் 'கூகுள் மேப்' பயன்படுத்தினாலும், உள்ளூர் தேவைக்காக ஒரு வழி பாதையாக மாற்றப்படுவது அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால், சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் அவர்கள் சாலையில் வாகனங்களை நிறுத்தி வழி கேட்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நீலகிரி மாவட்ட போலீசார் சாலையோரங்களின் முக்கிய சந்திப்புகள் உட்பட பல்வேறு இடங்களில் சுற்றுலா தலங்களின் பெயர்கள் அடங்கிய வழிகாட்டி பலகைகளை அமைக்கும் பணிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். போலீசார் கூறுகையில், ' இந்த பணியால், சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் எளிதாக செல்ல முடியும். போக்குவரத்து நெரிசலும் குறையும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ