உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  மொட்டை வால் செந்நாய் :சுற்றுலா பயணிகள் வியப்பு

 மொட்டை வால் செந்நாய் :சுற்றுலா பயணிகள் வியப்பு

கூடலுார்: முதுமலையில் மொட்டைவால் செந்நாயை பார்த்து சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு பாகன்கள் உணவுகள் வழங்குவதை பார்த்து ரசிக்கின்றனர். பின்பு, வனத்துறை வாகன சவாரி சென்று, விலங்குகளை பார்வையிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில், புலி, செந்நாய் போன்ற விலங்கள் ஒரு சில நேரங்களில் மட்டும் காண முடி யும். இந்நிலையில், இங்கு நேற்று வாகன சவாரி சென்ற சுற்றுலா பயணிகள், செந்நாய் கூட்டத்தையும், அதில் ஒன்று மொட்டை வாலுடன் இருப்பதை கண்டு, ஆச்சரியமடைந்தனர். சுற்றுலா பயணிகள் கூறுகையில், 'முதுமலையில் செந்நாய்கள் அரிதாகவே தென்படும். அவைகள் அடர்த்தியான வால் இருப்பதையே பார்த்து உள்ளோம். இங்கு மொட்டை வால் செந்நாயை முதன் முறையாக பார்த்தது வியப்பாக இருந்தது,' என்றனர். கால்நடை டாக்டர்கள் கூறுகையில், 'செந்நாய் அடர்த்தியான வால் கொண்டவை. இந்த செந்நாய் இயற்கையாக வால் இன்றி பிறந்திருக்கலாம். அல்லது குட்டியாக இருக்கும்போது மாமிச உண்ணி தாக்கியதில் இந்நிலை ஏற்பட்டிருக்கலாம். இது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி