உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சிறுத்தையை பிடிக்க கூண்டு இடமாற்றம்

சிறுத்தையை பிடிக்க கூண்டு இடமாற்றம்

மேட்டுப்பாளையம்:சிறுமுகை அருகே வெள்ளிப்பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. கூண்டில் சிறுத்தை சிக்காமல் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்ததால், கூண்டு அறிவொளி நகரில் உள்ள, தோட்டத்தில் மாற்றி வைக்கப்பட்டது.மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில் சென்னாமலை கரட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது. இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு சிறுத்தை நடமாட்டம் குறித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டில் சிறுத்தை சிக்காமல் போக்கு காட்டி வந்தது. இதையடுத்து கூண்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், வெள்ளிப்பாளையத்தில் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாக கூண்டு வைக்கப்பட்டது. சிறுத்தை அதில் சிக்கவில்லை. சிறுத்தை இடத்தை மாற்றிக்கொண்டே இருக்கும். இதையடுத்து, அறிவொளி நகரில் உள்ள தோட்டம் ஒன்றில் கூண்டு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. தொடர் கண்காணிப்பில் அப்பகுதி உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை