காட்டு யானை தாக்கி வன காவலர் காயம்
கூடலுார்; முதுமலை, மசினகுடி கோட்டம், சிங்கார வனச்சரகம், நார்தன் வேட்டை தடுப்பு முகாம் அருகே, வனக்காவலர் சுரேஷ் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் இருவர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திடீரென அப்பகுதிக்கு வந்த காட்டு யானையிடமிருந்து தப்ப வேண்டி ஓடினர். அதில், காட்டு யானை வனகாவலரை தாக்கியது. உடன் சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் சப்தமிட்டு யானையை விரட்டி அவரை மீட்டனர். காயமடைந்த அவருக்கு, மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்தனர்.தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக, ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.