மேலும் செய்திகள்
சைபர் கிரைம் மோசடி குறித்து விழிப்புணர்வு
20 minutes ago
பகவதி அம்மன் ஆறாட்டு மகோற்சவம் 30ல் துவக்கம்
21 minutes ago
23 சவரன் நகை திருட்டு
22 minutes ago
பாலக்காடு: பாலக்காடு அருகே, பிரசவத்தின் போது குழந்தை இறந்ததற்கு, மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், சித்தூர் வண்டித்தாவளம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன். இவரது மனைவி ஆனந்தி. நிறைமாத கர்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக சித்தூர் தாலுகா மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில சிக்கல்கள் கண்டறிந்து, நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். ஆனால், பிரசவ வலி அதிகரித்து கர்ப்பப்பையில் இருந்து சிசு வெளியே வந்ததால், உடனடியாக தாலுகா மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில், பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. குழந்தையின் இறப்புக்கு தாலுகா மருத்துவமனை மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என நாராயணன் குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட மருத்துவ அதிகாரியிடம் புகார் அளித்தார். அதேநேரத்தில், சிகிச்சையில் எந்தவித அலட்சியமும் இல்லை, மருத்துவமனையில் அனுமதிக்க வரும்போதே குழந்தையின் கால் வெளியே வந்திருந்தது. அதனால் தான் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது, என, தாலுகா மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 minutes ago
21 minutes ago
22 minutes ago