மேலும் செய்திகள்
காட்டு யானை உயிரிழப்பு; வனத்துறை விசாரணை
4 hour(s) ago
எம்.ஜி.ஆர்., நினைவு தினம் அனுஷ்டிப்பு
5 hour(s) ago
பாலக்காடு: கதாபாத்திரங்களை ஆழமாக ஆராய்வது மோஹினியாட்டம். அதனால் ஏற்பட்ட ஆசை தான், மோஹினியாட்டத்தின் பக்கம் என்னை ஈர்த்தது என, பிரபல மோஹினியாட்ட கலைஞர் சுனந்தா நாயர் தெரிவித்தார். கேரள மாநிலம், பாலக்காடு ராப்பாடி கலையரங்கில், கலை அமைப்பான ஸ்வரலயா சார்பில், வரும், 31ம் தேதி வரை 'சூரியா' எனும் நடன சங்கீத உற்சவம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள வந்த பிரபல மோஹினியாட்ட கலைஞர் கலைஞர் சுனந்தா நாயர் நிருபர்களிடம் கூறியதாவது: கதாபாத்திரங்களை ஆழமாக ஆராய்வது மோஹினியாட்டம். அதனால் ஏற்பட்ட ஆசை தான், மோஹினியாட்டத்தின் பக்கம் என்னை ஈர்த்தது. கதகளியைப் படித்தது இதற்கு பயனுள்ளதாக இருந்தது. எனது, 40 வருட நடன பயணத்தின் இடையே, சிறந்த காட்சிகளின் தொகுப்பினை இங்கு வழங்குகிறேன். இவ்வாறு, அவர் கூறினார். பரதநாட்டிய கலைஞர் கீர்த்தி ராம் கோபால் கூறியதாவது: நடன வடிவங்களை குறுகிய நேரத்தில் நிகழ்த்தும்போது சிறந்து விளக்க முடியாது. பரதநாட்டியம் அதன் முழு வடிவத்தில் நிகழ்த்தப்படும் போது தான், அதன் தாளத்தையும் அழகையும் பார்வையாளர்களுக்கு அளிக்க முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.
4 hour(s) ago
5 hour(s) ago