உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; அறுவடை பணி தீவிரம்

ஊட்டி பீட்ரூட் விலை உயர்வு; அறுவடை பணி தீவிரம்

ஊட்டி ; ஊட்டி மார்க்கெட்டில் தரமான பீட்ரூட் கிலோ, 40க்கு விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் உருளை கிழங்கு,கேரட், பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள், ஊட்டி மார்க்கெட் சந்தைக்கு கொண்டு வந்து விற்கப்படுகிறது. பின், தரம் பிரிக்கப்பட்டு, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சமீப காலமாக, ஊட்டியில் விளைவிக்கப்படும் மலை காய்கறிகளுக்கு ஓரளவுக்கு விலை கிடைத்து வருகிறது. அதில், ஊட்டி பீட்ரூட் கடந்த வாரம் கிலோ, 30க்கு விற்பனையானது. நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் அவசர, அவசரமாக பீட்ரூட் அறுவடை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், நேற்று கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 'ஒரு துண்டு' எனப்படும், 80 கிலோ மூட்டை,3,200 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதனால், கூடுதல் லாபம் கிடைத்து வருவதால் சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை