மேலும் செய்திகள்
பராமரிப்பில்லாத நகராட்சி லாரி கண்டு கொள்ளாத நிர்வாகம்
9 hour(s) ago
ரூ.2.66 கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
9 hour(s) ago
ரூ.1.25 கோடியில்புதிய நுாலக கட்டடம்
9 hour(s) ago
கோத்தகிரி;கோத்தகிரி அருகே, இரவில் மட்டும் இரைதேடும் அரிய வகை விலங்கான 'ஆசியன் மரநாய்' வாகனம் மோதி பலியானது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.கோத்தகிரி கொணவக்கரை கிராமத்தை ஒட்டிய உள்ள, கண்ணவரை சோலை, வனவிலங்குகளின் வாழிடமாக உள்ளது. இங்குள்ள சாலையை, கரடி, புலி, காட்டெருமை மற்றும் முள்ளம்பன்றி போன்ற பல வன விலங்குகள், உணவுக்காக கடந்து செல்வது வழக்கம்.இங்கு இரவில் வனவிலங்குகள் வாகனங்களில் அடிப்பட்டு இறப்பது, சமீபக்காலமாக வாடிக்கையாக உள்ளது. கடந்த ஒரு வாரத்தில், மூன்று விலங்குகள் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை அழிவின் விளிம்பில் உள்ள 'பிரவுன் பாம் சிவெட்' என்று அழைக்கப்படும் 'ஆசியன் மரநாய்' வாகனத்தில் அடிபட்டு சாலையில் இறந்து கிடந்தது. தகவலின் பேரில், கோத்தகிரி ரேஞ்சர் ஆலோசனை படி, வனவர் விவேகானந்தன் உட்பட, வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, இறந்த மர நாயை மீட்டு, வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். வனவர் விவேகானந்தன் கூறுகையில், ''மூன்று முதல் நான்கு வயதான ஆசியன் மரநாய் சாலையில் வாகனம் மோதி இறந்து கிடந்தது. அரிய வகை விலங்கான இதனை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் செல்லும் வாகனங்கள் குறித்தும், விலங்குகளின் வழித்தட தடை குறித்தும் ஆய்வு செய்யப்படும்,'' என்றார்.,
வன உயிரின ஆர்வலர்கள் கூறுகையில், 'பல்லுயிர் சூழல் மிகுந்த பகுதியான கண்ணவரை வனப்பகுதியில், வன விலங்குகள் மற்றும் தாவர இனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதால், இப்பகுதியை 'சிறப்பு பல்லுயிர் சூழல் பகுதி' என அறிவித்து, பாதுகாக்கப்பட வேண்டும்.மேலும், அந்த பாதையில் தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் அமைத்துள்ள வேலி, வனவிலங்குகள் பாதையை கடப்பதற்கு முடியாத வகையில் அமைந்துள்ளது. இதனை வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும்.இப்பகுதி சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் இரவில் விலங்குகள் பலியாகி வருகின்றன. இதனை தவிர்க்க, 'விலங்குகள் நடமாடும் பகுதி ' என, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். வாகன வேகத்தை குறைக்க 'ஸ்பீடு பிரேக்கர்' அமைப்பது அவசியம்,' என்றனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago