உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / சொந்த செலவில் நடைபாதை அமைத்து தந்த வார்டு கவுன்சிலர்

சொந்த செலவில் நடைபாதை அமைத்து தந்த வார்டு கவுன்சிலர்

குன்னுார்:ஜெகதளா பேரூராட்சியில், அ.தி.மு.க., கவுன்சிலர், 2 லட்சம் ரூபாய் செலவு செய்து நடைபாதை சீரமைப்பு பணியை மேற்கொண்டுள்ளார்.குன்னுார் அருகே ஜெகதளா பேரூராட்சியில், ஆளும் கட்சியினர் தலைவர் பங்கஜம் மற்றும் அதே கட்சியை சேர்ந்த சில கவுன்சிலர்களுக்கு இடையே கோஷ்டி பூசல் நிலவுகிறது. இதனால், தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்காத நிலை உள்ளது. அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டு நிலை அதை விட பரிதாபமாக உள்ளது. இந்நிலையில், பேரூராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பாலாஜி நகர் பகுதியில் நடைபாதையை, அ.தி.மு.க., கவுன்சிலர் சஜீவன், 2 லட்சம் ரூபாய் சொந்த செலவில் சீரமைத்தார். இதற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை