உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தர்ம முனீஸ்வரர் கோயிலில் 100 கிடாய்கள் நேர்த்திக்கடன்

தர்ம முனீஸ்வரர் கோயிலில் 100 கிடாய்கள் நேர்த்திக்கடன்

கமுதி : -கமுதி அருகே பெருமாள் தேவன்பட்டி கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறி விட்டால் காணிக்கையாக கிடாய் வழங்கி வருகின்றனர்.ஆண்டு தோறும் வைகாசி பொங்கல் விழா நடக்கிறது. இந்தாண்டு வைகாசி பொங்கல் விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது.விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, வேல் குத்தி கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பொதுமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோயிலுக்கு பக்தர்கள் வேண்டுதலாக கொடுத்த 100க்கும் மேற்பட்ட கிடாய்கள் பலியிட்டு 2000 கிலோ கறி விருந்து சமைக்கப்பட்டு தர்ம முனீஸ்வரருக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின் சமைக்கப்பட்ட கறி விருந்து மக்களுக்கு அன்னதானமாக வழங்கப்பட்டது. விழாவில் கமுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பெருமாள் தேவன்பட்டி கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை