உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

ஒரு மாணவிக்கு பாடம் நடத்தும் 2 ஆசிரியர்கள்

திருவாடானை:ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடம்பூரில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஒரு மாணவி மட்டுமே படிக்கிறார். அவருக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்துகின்றனர். காலை 9:00 மணிக்கு வரும் இரு ஆசிரியர்கள், மாணவியின் வருகைக்காக காத்திருக்கின்றனர். அந்த மாணவி 9:30 மணிக்கு பள்ளிக்கு வந்த பின், அவருக்கு பாடம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மாணவிக்காக, கடம்பூர் அருகே குருந்தங்குடி அரசு தொடக்கப்பள்ளியில் சமைக்கப்படும் சத்துணவை எடுத்து வந்து வழங்குகின்றனர். கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது:கிராமத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் நகரங்களுக்கு சென்று விட்டனர்; வயதானவர்கள் மட்டுமே உள்ளனர். திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், 80 அரசு தொடக்கப்பள்ளிகள் உள்ளன. இதில் மாணிக்கம்கோட்டை, கடம்பூர், உள்ளிட்ட 11 அரசு தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் தான் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ