உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / திருக்காலுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

திருக்காலுடைய அய்யனார் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கிழவனேரி கிராமத்தில் திருக்காலுடைய அய்யனார், விநாயகர், முருகன், மாசாத்தி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, தனபூஜை, கணபதி ஹோமம், பிரவேச பலி துவங்கப்பட்டு நவக்கிரக ஹோமம், தீப லெட்சுமி பூஜை, மிருத்சங்கிரஹனம், பிரசன்னாபிஷேகம், பரிவார கலாகர்ஷனம், கும்பலங்காரம், முதற்கால, இரண்டாம் கால யாக பூஜைகள், பூர்ணாஹுதி தீபாராதனைகள் நடந்தது.மூன்றாம், நான்காம் கால யாக பூஜைகள் தீபாராதனை கடம் புறப்பாட்டுக்கு பின்பு கலசத்திற்கு கும்பநீர் ஊற்றப்பட்டது. மூலவரான திருக்காலுடைய அய்யனார் உட்பட பரிவார தெய்வங்களுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பொது அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிழவனேரி கிராம மக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை