உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரம்: நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமானோர் நேற்று ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் பூஜை செய்து அக்னி தீர்த்தம், பின் கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். பின்னர் கோயிலில் சுவாமி,அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை