உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் கந்தவடி உற்ஸவம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகன புறப்பாடு

எமனேஸ்வரம் பெருமாள் கோயிலில் கந்தவடி உற்ஸவம் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கருட வாகன புறப்பாடு

பரமக்குடி,- பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி வசந்த விழாவில் நேற்று மாலை கந்தவடி உற்ஸவம் நடந்தது.எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்திமான பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாள் கோயில் 22-வது வைகாசி பிரம்மோற்ஸவம், 117 வது வசந்த விழா நடந்தது. தொடர்ந்து 20 நாட்கள் நடந்த விழாவில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார்.மேலும் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் காட்சி அளித்து மே 27ல் மீண்டும் கோயிலுக்கு திரும்பினார். இதனை ஒட்டி மே 29 காலை உற்ஸவ சாந்தி அபிஷேகம், இரவு 7:00 மணிக்கு சைத்யோபசாரம் நடந்தது.நேற்று கந்தவடி உற்ஸவத்தில் மாலை 6:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெரிய திருவடியான கருட வாகனத்தில் வைகுண்ட நாதனாக அருள் பாலித்தார். பின்னர் தீபாராதனைகள் நடந்து ரத வீதிகளில் பெருமாள் வீதி உலா வந்து கோயிலை அடைந்தார். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபை நிர்வாகத்தார்கள், கவுன்சிலர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை