உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / குண்டுகுளத்தில் பால்குட ஊர்வலம்

குண்டுகுளத்தில் பால்குட ஊர்வலம்

கமுதி, : கமுதி அருகே குண்டுகுளம் கிராமத்தில் சிவகாளியம்மன், அழகுத்தாய் அம்மன் கோயில் ஆடி பொங்கலை முன்னிட்டு 10 நாட்கள் முன்பு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். பின் அம்மனுக்கு பால், சந்தனம், மஞ்சள் உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது.கோயில் முன்பு பக்தர்கள் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராமம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. கமுதி அதனை சுற்றியுள்ள கிராமத்தினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ