மேலும் செய்திகள்
பரமக்குடியில் பெருமாள் ஆண்டாள் மாலை மாற்றல்
09-Aug-2024
பரமக்குடி : பரமக்குடியில் உள்ள கோயில்களில் அமாவாசை நாளான நேற்று முன்தினம் இரவு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.பரமக்குடி புதுநகரில் 18ம் படி கருப்பண்ண சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் மாலை கருப்பண்ண சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விபூதி அலங்காரம் செய்யப்பட்டு 18 படிகளில் சூடம் ஏற்றி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.*பரமக்குடி எமனேஸ்வரம் அனுமார் கோயிலில் மூலவருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் வெண்ணெய்யில் செந்துார அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.இதேபோல் பல்வேறு கோயில்களில் அமாவாசை நாளில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
09-Aug-2024