உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் தசாவதார சேவை

பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் தசாவதார சேவை

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பவுர்ணமி வசந்தோற்ஸவ விழாவில் பெருமாள் தசாவதார சேவையில் அருள் பாலித்தார்.எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் 117வது வசந்த உற்ஸவ விழா மே 22 காலை துவங்கியது. அப்போது பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து மே 23 அதிகாலை 5:30 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.தொடர்ந்து காலை 10:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகி இரவு வண்டியூர் மண்டகப்படியை அடைந்தார். பின்னர் நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் வெண்ணெய் உண்ட கிருஷ்ணன் திருக்கோலத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சியளித்தார். மேலும் இரவு முழுவதும் மச்சம், கூர்ம, ராமர், கிருஷ்ணர் மற்றும் மோகினி அவதாரங்களில் தசாவதார சேவையில் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க பெருமாளை தரிசனம் செய்தனர். நேற்று இரவு கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், இன்று அனுமன் வாகனத்தில் அருள் பாலிக்கிறார்.நாளை இரவு 10:00 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் இருந்து பூப்பல்லக்கில் அமர்ந்து விடிய, விடிய வீதி உலா வருகிறார். தொடர்ந்து மே 28 காலை 10:00 மணிக்கு மீண்டும் கோயிலை அடைய உள்ளார். விழாவையொட்டி கோயில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் பொதுமக்கள் குடும்பத்துடன் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்து, நிலா ஒளியில் உணவருந்தி செல்கின்றனர். ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை