உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா

மாற்று கோலத்தில் பெருமாள்- தாயார் இன்று பல்லக்கில் உலா

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் திருக்கல்யாண உற்ஸவத்தையொட்டி பெருமாள், தாயார் மாற்றுத் திருக்கோலத்தில் எழுந்தருளினர்.பரமக்குடி பெருமாள் கோயிலில் மார்ச் 25 காலை 10:00 மணிக்கு பெருமாள், தாயார் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் ஊஞ்சலில் சேவை சாதித்தார்.நேற்று காலை 4ம் நாளில் பெருமாளுக்கு தாயார் திருக்கோலமும், சவுந்தரவல்லி தாயார் பெருமாள் திருக்கோலத்திலும் அருள் பாலித்தார். இன்று(மார்ச் 29) காலை திருமஞ்சனம் நடக்கிறது.தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பூப்பல்லக்கில் வீதி உலா வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை