உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

கமுதி: கமுதி அருகே கோரப்பள்ளம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா, பொங்கல் விழா நடந்தது. ஆடி முதல் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.நேற்று கருப்புசாமி வேடமணிந்து திரியாட்டம் ஆடி அருள்வாக்கு கூறினர். காப்பு கட்டிய பக்தர்கள் கிராமத்தின் காவல் தெய்வமான கருப்புசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களை வணங்கி ஊர்வலமாக வந்து கோயில் முன்பு பூக்குழி இறங்கினர்.கிராம மக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக சென்று கங்கையில் கரைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை