உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் மீனவர்கள் இருவரை கடலில் மூழ்கடித்து கொலை செய்த இலங்கை கடற்படையை கண்டித்து, ஜூலை 31 முதல் இங்குள்ள மீனவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். இந்நிலையில், வாழ்வாதாரம் கருதி வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று, நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் இருந்து, 400 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்.இவர்கள், நடுக்கடலில் மீன்பிடித்த போது, மூன்று கப்பல்களில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், தங்கள் நாட்டுப்பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து, படகுகள் மீது கற்களை வீசி தாக்கினர்.இதனால், அச்சமடைந்த தமிழக மீனவர்கள், கடலில் வீசிய வலையை கூட இழுக்காமல் திரும்பினர். ஒரு சில மணி நேரத்திற்கு பின் இலங்கை கடற்படையினர் திரும்பி சென்றதும், மூழ்கிய வலையை மீட்டு, மீனவர்கள் வெறும் படகுடன், ராமேஸ்வரம் கரை திரும்பினர். சேதமடைந்த வலையை கரையில் சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை