உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.56 கோடி காணிக்கை

ராமேஸ்வரம் கோயிலில் ரூ. 1.56 கோடி காணிக்கை

ராமேஸ்வரம்,- ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை 1 கோடியே 56 லட்சத்து 18 ஆயிரத்து 344 ரூபாய் வருவாயாக கிடைத்தது.ராமேஸ்வரம் கோயிலில் 30 நாட்களுக்கு பின் நேற்று கோயில் சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணப்பட்டது.இதில் கோயில் பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, முனியசாமி, கோயில் ஊழியர்கள் மற்றும் சேலம் எடப்பாடி பகுதியை சேர்ந்த 300 சிவனடியார்கள் காணிக்கைகளை எண்ணினார்கள்.இதில் ரொக்கம் ரூ. 1 கோடியே 56 லட்சத்து 18 ஆயிரத்தி 344 ரூபாயும், தங்கம் 68 கிராம், வெள்ளி 5 கிலோ 565 கிராம் காணிக்கையாக கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை