உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கோடை வெயிலில் உப்பு விளைச்சல் அதிகரிப்பு

கோடை வெயிலில் உப்பு விளைச்சல் அதிகரிப்பு

திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே ஆனைகுடி, காஞ்சிரங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 200 ஏக்கருக்கும் அதிக பரப்பளவில் உப்பளம் அமைந்துள்ளது. தற்போது கொளுத்தும் கோடை வெயிலால் உப்பு உற்பத்தி அதிகரித்துள்ளது.மழைக்காலங்களில் ஒரு டன் உப்பு ரூ.7000 முதல் 8000 வரை விற்பனையானது. நவ., டிச., மாதங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் துாத்துக்குடி பகுதிகளில் அதிகளவு உப்பளங்கள் வெள்ள நீரால் பாதிப்பை சந்தித்தது. இந்நிலையில் ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள உப்பளங்களில் இருந்து துாத்துக்குடி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு உப்பு சரக்கு வாகன லாரிகள் மூலமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.நிலைமை சீரடைந்தவுடன் கோடை வெயிலின் தாக்கத்தால் உப்பு அதிகம் உற்பத்தியாகும் நிலையில் உப்பு உற்பத்திக்கான விலை குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உப்பு ஒரு டன்னுக்கு ரூ.1500 முதல் 2000 வரை விற்பனை செய்யப்படுகிறது.உணவு தேவைக்கான உப்பு போக மீதமுள்ள உப்பு உரத்துறை தொழிற்சாலை, ப்ளீச்சிங் பவுடர், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவைகளுக்காக ஏற்றி அனுப்பப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி