உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  1.60 லட்சம் சிகரெட் பாக்கெட் இலங்கையில் பறிமுதல்

 1.60 லட்சம் சிகரெட் பாக்கெட் இலங்கையில் பறிமுதல்

ராமேஸ்வரம்: இலங்கை கடலில் மிதந்த 1.60 லட்சம் சிகரெட் பாக்கெட்டுகள், அழகு சாதன பொருட்களை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை நெடுந்தீவு, யாழ்ப்பாணம் இடையே கப்பலில் ரோந்து சென்ற அந்நாட்டு கடற்படை வீரர்கள் அங்கு மிதந்து வந்த 9 பார்சலை சேகரித்து கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர். பார்சலை சோதனையிட்டதில் 1.60 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், 150 அழகு சாதன கிரீம் பாக்கெட்டுகள், 10 கைக் கடிகாரங்கள் இருந்தன. இதனை தமிழக கடலோர பகுதியில் இருந்து கள்ளப்படகில் கடத்தல்காரர்கள் இலங்கைக்கு கடத்தி வந்த போது ரோந்து கப்பலை பார்த்ததும் பார்சலை கடலில் துாக்கி வீசிவிட்டு தப்பி இருக்கலாம் என தெரிகிறது. இங்குள்ள கடத்தல்காரர்கள் யார் என தமிழக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ