மாணவர்களுக்கு பாராட்டு
ராமநாதபுரம் : பனைக்குளம் பஹ்ருதீன் தொடக்கப்பள்ளியில் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பராட்டு விழா நடந்தது.விவேகானந்த கேந்திரம் நடத்திய ஒன்றிய அளவிலான பண்பாட்டுப்போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும், 25 வது மாவட்ட அளவிலான சதுரங்க போட்டியில் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், பள்ளியின் தலைமையாசிரியர் முத்துமாரி, பள்ளி ஆசிரியர் சதுரங்க பயிற்சியாளர் மணிகண்டன் ஆகியோர் பாராட்டினர். முன்னதாக பள்ளியின் இசைக்குழு சார்பில் மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.