உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல்: 5 பேர் மீது வழக்கு

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயசாந்தி 34. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். இவர் தனது அம்மாவின் இடத்தில் வீடு கட்டுவதற்காக இடத்தை அளந்து வேலி அமைத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சிலர் முன்விரோதம் காரணமாக வேலியை அகற்றி விட்டு விஜயசாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து திருப்பாலைக்குடி கிராம தலைவர் தமிழ்காளி, அதேபகுதி நாகலிங்கம், கார்த்திக், மாவீரன், காட்டுராஜா ஆகியோர் மீது திருப்பாலைக்குடி போலீஸ் எஸ்.ஐ., அர்ஜிண கோபால் வழக்கு பதிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை