உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்

அக்னி தீர்த்த கடலில் நீராடிய பக்தர்கள்

ராமேஸ்வரம்,:ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கோவில் வளாகத்தில், 22 தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். கோவிலில் சுவாமி மற்றும் பர்வதவர்த்தனி அம்மன் சன்னதிகளில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி மற்றும் அம்மனை தரிசனம் செய்தனர். நான்கு ரதவீதி, சன்னதி தெரு, பஸ் ஸ்டாண்ட் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல், கோவில் மேல வாசல் வரை ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பக்தர்கள் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி