உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / கீழமுந்தல் புயல் காப்பகத்தில் இயங்கும் பள்ளி வகுப்பறை புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு

கீழமுந்தல் புயல் காப்பகத்தில் இயங்கும் பள்ளி வகுப்பறை புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு

வாலிநோக்கம், : வாலிநோக்கம் ஊராட்சி கீழமுந்தலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்படுகிறது. 1 முதல் 5ம் வகுப்பு மற்றும் 6 முதல் 8ம் வகுப்புகளும் உள்ளன. 310 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமையாசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்கள் உள்ளனர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்த பள்ளி வகுப்பறை கட்டடம் இழுத்து அகற்றப்பட்டது. மீண்டும்அவ்விடத்தில் புதிய கட்டடம் எழுப்பப்படாததால்பள்ளி மாணவர்கள் அருகே உள்ள புயல் காப்பக கட்டடத்தை வகுப்பறையாக பயன்படுத்தி வருகின்றனர்.பா.ஜ., தெற்கு ஒன்றியதலைவர் ராஜசேகர பாண்டியன் கூறியதாவது:பள்ளி மாணவர்களின் நலன் கருதி புதிய வகுப்பறை கட்டடம் கட்ட வேண்டும். சேதமடைந்த கட்டடம் இடித்து அகற்றப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. பேரிடர் மீட்பு மற்றும் புயல் காப்பகத்தில் வகுப்பறை செயல்படுகிறது.பள்ளி மாணவர்களுக்கு கழிப்பறை வளாகம் இல்லாததால் இயற்கை உபாதை கழிக்க திறந்த வெளியை நாடுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்களின் நலன் கருதி கூடுதல் வகுப்பறை கட்டடத்தை பள்ளி வளாகத்தில் கட்டவும், கழிப்பறை வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை