உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா துவக்கம்

புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா துவக்கம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் புனித ஜெபமாலை அன்னை சர்ச் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைவட்ட அதிபர் சிங்கராயர் தலைமை வகித்தார். சிவகங்கை வல்லனி பங்குப் பணியாளர் பிலிப் சேவியர் கொடியேற்றினார். தினமும் மாலை 5:00 மணிக்கு பாவ சங்கீர்த்தனம் வழங்கப்படும். மாலை 6:00 மணிக்கு ஜெபமாலையும், திரு உருவப் பவனியும், நவநாள் திருப்பலியும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக அக்.,4ல் திருப்பலி, தேர்ப்பவனி, அக்., 5ல் பெருவிழாத் திருப்பலி, நற்கருணைப் பவனி நடக்கும். அக்.,7 மாலை 6:15க்கு புனித ஜெபமாலை அன்னை விழாத் திருப்பலியும், இறுதியாக அன்னையின் திருஉருவப் பவனியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை