ஈஷா தியான நிகழ்ச்சி
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பாரதி நகரில் ஈஷா அறக்கட்டளை சார்பில்'மிராக்கிள் ஆப் மைண்ட்' தியான நிகழ்ச்சி நடந்தது. உலக தியான தினத்தை முன்னிட்டுஈஷா யோக மையம் சார்பில் சுவாமி அகம்பிதா கலந்து கொண்டார். தொழிலதிபர்கள் வேலு மனோகரன், தரணிமுருகேசன் துவக்கி வைத்தனர். டாக்டர்கள், வழக்கறிஞர்கள், தொழில் துறையினர், கல்வி நிறுவனங்களின் தாளாளர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'மிராக்கிள் ஆப் மைண்ட்' எனும் இலவச தியான செயலியை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்பட்டது.