உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பள்ளிகளில் ஜூலை 25ல் மேலாண்மை கூட்டம்

பள்ளிகளில் ஜூலை 25ல் மேலாண்மை கூட்டம்

திருவாடானை:திருவாடானை வட்டாரத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஜூலை 25ல் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடைபெற உள்ளது.மாணவர்கள் முன்னேற்றத்திற்காக ஒவ்வொருமாதமும், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும்.அந்த வகையில் இந்த கல்வியாண்டின் முதல் கூட்டம் ஜூலை 25ல் மதியம் 3:00 முதல் 4:30 மணி வரை நடைபெற உள்ளது. இது குறித்து திருவாடானை வட்டார கல்வி அலுவலர்கள் கூறியதாவது:திருவாடானை வட்டாரத்தில் தொடக்கப்பள்ளி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் என 112 அரசுப் பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு முதல் கூட்டமாக ஜூலை 25ல் பள்ளி மேலாண்மை கூட்டம் நடத்தப்பட உள்ளது. கூட்டத்தில் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதப் பாடங்களில் உள்ள கற்றல் திறன் குறித்தும், அதை மேம்படுத்துவது குறித்தும் விவாதித்து கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களின் நிலை குறித்து பெற்றோர்களுடன் ஆலோசித்து உரிய முடிவுகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பாலியல் துன்புறுத்தல், போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பு, மாணவர்களின் சேர்க்கை குறித்து விவாதித்து சாதகமான முடிவுகளை எடுக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி