உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / விதி மீறல் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு

விதி மீறல் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவு

ராமநாதபுரம் : ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஜன., 21ல் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்ததில் வடமாநிலத்தை சேர்ந்த இரு பயணிகள் பலியாகினர். டிரைவர் வீரமணிகண்டன் 34 சிறையில் அடைக்கப்பட்டார். அவர் ஜாமின் கேட்டு 3 வது முறையாக ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதி குமரகுரு ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.நீதிபதி உத்தரவில் தெரிவித்திருப்பதாவது: தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விதி மீறல் வாகனங்களால் விபத்துக்கள், உயிர்பலி ஏற்படுகிறது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் விதி மீறல் வாகனங்களை கண்காணித்து பறிமுதல் செய்ய வேண்டும். கலெக்டர், எஸ்.பி., ஆகியோர் கண்காணிக்க வேண்டும். விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை