உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழை நீரால் மக்கள் சிரமம்

பஸ் ஸ்டாண்டில் தேங்கிய மழை நீரால் மக்கள் சிரமம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.முதுகுளத்துாரில் இருந்து மதுரை, சென்னை, கோவை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்செந்துார், கும்பகோணம் உட்பட கிராமப் பகுதிகளுக்கு தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. முதுகுளத்துார் சுற்றியுள்ள பகுதியிலிருந்து பலர் செல்கின்றனர்.தற்போது கடந்த சில நாட்களாக முதுகுளத்துாரில் அவ்வப்போது மழை பெய்கிறது. முதுகுளத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பஸ்சிற்கு காத்திருக்கும் மக்கள் சிரமப்படுகின்றனர். நடப்பதற்கு முகம் சுளிக்கின்றனர்.தேங்கிய தண்ணீரில் கொசு உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ