உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மீன்பிடி தடை காலத்திற்குப் பின் இலங்கை கடற்படை யினர் கைது செய்த ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் 61 பேரையும், சிறை தண்டனை பெற்றுள்ள 27 மீனவர்கள் மற்றும் சிறைபிடித்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ராமேஸ் வரம் மீனவர்கள் ஆக., 11 முதல் மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நேற்று தங்கச்சிமடத்தில் சங்கத் தலைவர் சேசு தலைமையில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சங்க தலைவர்கள் எமரிட், ஆல்வின், பீட்டர், காரல்மார்க்ஸ், ஏராளமான மீனவர்கள், மீனவ பெண்கள் பங்கேற்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஆக.,15ல் தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதமும், ஆக., 19ல் ரயில் மறியலும் நடக்கும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை