உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் / தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

தண்ணீருக்காக 4 கி.மீ., நடக்கும் அவலம்

ராமநாதபுரம் : திருவாடானை அருகே குடிநீருக்காக 4 கி.மீ., நடக்க வேண்டிய அவலநிலையில் மக்கள் உள்ளனர். நல்லகடம்பன் ஊராட்சியை சேர்ந்த இந்திரா காலனியில் 300க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தண்ணீருக்காக 2 கி.மீ., தொலைவில் உள்ள மருங்கூருக்கு செல்கின்றனர். தெரு விளக்குகள் எரிவதில்லை. சுடுகாட்டிற்கு வயலை தாண்டித்தான் செல்கின்றனர். இந்திரா காலனி பாண்டி மீனா கூறியதாவது: மயான பாதைக்கு ஒரு லட்சம் நிதி ஒதுக்கியும், இதுவரை பணி நடக்கவில்லை. காவிரி எங்களுக்கு, கானல் நீராக உள்ளது. அடிப்படை வசதிகள் செய்து தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை