மேலும் செய்திகள்
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் அபராதம்
11-Feb-2025
ராமேஸ்வரம் : இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம், மண்டபம் மீனவர்கள் 10 பேருக்கு பிப்.,28 வரை சிறைக்காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் இருந்து ஜன.3ல் மீன்பிடிக்க சென்ற 2 படகில் இருந்த 10 மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இவர்களை வாய்தா நாளான நேற்று மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.மீனவர்களை பிப்., 28 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் மீனவர்களை மீண்டும் வவுனியா சிறையில் அடைத்தனர்.
11-Feb-2025