உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ராமநாதபுரம் /  ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

 ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சூறாவளியால் தடை நீட்டிப்பு

ராமேஸ்வரம்: வங்கக் கடலில் தொடர்ந்து சூறாவளி வீசுவதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை நீடிக்கிறது. நவ., 14ல் வங்கக் கடலில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதற்கிடையில் காற்றின் வேகம் தணிந்ததும் நவ., 22ல் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதித்தனர். ஆனால் வங்க கடலில் மீண்டும் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் நேற்று முதல் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. நேற்றுடன் 10 நாட்களாக மீன்பிடிக்க செல்லாமல் மீனவர்கள் வீடுகளில் முடங்கியதால் வருவாயின்றி அன்றாட குடும்பச் செலவுக்கு பரிதவிக்கின்றனர். பாம்பன் கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பால் தெற்குவாடி கடற்கரையில் உள்ள மீனவர்கள் வலை கட்டும் கட்டடம் ராட்சத அலையால் அரிப்பு ஏற்பட்டு படிக்கட்டுகள் சேதமடைந்தன. பாம்பனில் ஒரு படகு மூழ்கியது. அதை மீனவர்கள் மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்